24 Nov 2010

அற்புத இயேசு ராஜனே

அற்புத இயேசு ராஜனே
உத்தம மணாளனே
நீரே என் ஆறுதல் ... ஓ ... நீரே என் ஆறுதல்
என் கோட்டை
என் துருகம்
நான் நம்பினவர்
என் அடைக்கலம் - 4

கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்
நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் - 2
என் ராஜா
என் ரோஜா
என் தெய்வம்
என் இயேசு - 4

நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்
போற்றி பாடும் சர்வ வல்ல ராஜன் - 2
என் அன்பர்
என் இன்பர்
என் நண்பர்
என் இயேசு - 4

ஒருவாய் பெரிய‌ காரிய‌ங்க‌ளை செய்ப‌வ‌ர்
இருளிலிருந்து புத‌ய‌லைக் கொண்டுவ‌ருப‌வ‌ர் - 2
நீர் பெரிய‌வ‌ர்
துதிக்கு பாத்திர‌ர்
எனக்கு உரிய‌வ‌ர்
என் இயேசு - 4

30 Oct 2010

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே - 2
ஓசன்னா ஜெயம் நமக்கே - 2

அல்லேலுயா துதி மகிமை
என்றும் அல்லேலுயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
கர்த்தர் நம்முடனே

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை முன்னே நின்றாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
மீட்பர் நம்முடனே

ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே

ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
எங்கள் ஆராதனைக்குள் இன்று
வாசம் செய்கிறீர்

அல்லேலுயா ஆராதனை - 4
ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர் மேல் அசைந்தே
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்
என் உள்ளத்தில் வாசம் செய்யும்

மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்

25 Oct 2010

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால் என்னை இழுத்துக்கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து கொண்டீரே

தாயின் கருவில் தோன்று முன்னே தெரிந்து கொண்டீரே
தாயை போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே

நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா

கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே

யோசனையில் பெரியவரே ஆராதனை

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை

ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை

சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை

வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை

தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை

பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை